×

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை, ஏப். 12: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 86 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலி இடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 19 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 14 மனுவும், தெற்கு மண்டலத்தில் 13 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 21 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் என மொத்தம் 86 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மண்டல உதவி கமிஷனர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Corporation People's Grievance Redressal Camp ,Coimbatore ,People's Grievance Day ,Coimbatore Corporation ,Mayor ,Kalpana Anandakumar ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...